Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

தன்னம்பிக்கை

 தன்னம்பிக்கை யாரோ தருவது அல்ல, அது தானாகா உள்ளிருந்து வரும் உத்வேகம். ஒரு சவாலான வேலை அதனை ஒரு சிலரால் தான் இதுவரை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் அந்த ஆபத்தான வேலையை செய்ய முன்வரவில்லை.

ஆனால் கட்டாயம் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய நிலை ஆனால் அங்கிருக்கும் யாருக்கும் அந்த வேலையைப் பற்றி தெரியாது. தெரிந்தவர்களை வைத்து செய்யலாம் என்றால் அவர்கள் வந்து செய்ய தயாராக இல்லை. 

அதிக பணம் கேட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர்களுக்கு நான் இல்லாமல் யார் செய்து விடுவார்கள் என்ற எண்ணம்.

ராமுவிற்கு நம்பிக்கை உண்டு யாரோ ஒருவர் நிச்சயம் இந்த வேலையை செய்யத் தான் போகிறார்கள். நாம் செய்தால் என்ன! என்று தோன்றினாலும் வேலை செய்யும் இடம் என்பது மீட்டர் உயரம்.



தப்பி தவறி விழுந்தால் எதுவும் மிஞ்சாது. ஆனால் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு தீர்க்கமாக உண்டு.

அவன் உடன் இருந்தோருக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லை என்பதை தாண்டி பயம் இதை நாம் எப்படி செய்ய முடியும் ?

மொத்தம் இந்த வேலை தெரிந்தவர்களே குறைவு இப்படி ஒரு நிலையில் ஏதேனும் சந்தேகம் வந்தால் கூட அதை யாரிடம் கேட்க முடியும் என்று நம்பிக்கையிழந்தவர்கள் அனைவரும் ராமுவை திட்டினர் அதனை செய்ய முடியாது என்று சொல் என்று அவனை கட்டாயப் படுத்தினர்.

அவன் அங்கு அவர்களுக்கு பதிலளித்தான் நீங்கள் வருவது உங்கள் விருப்பம் நீங்கள் வரவில்லையென்றாலும் நான் இதனை செய்யத் தான் போகிறேன், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை நான் எத்தனை கடினமானா செயலையும் செய்து கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் உடனிருங்கள் இல்லையென்றால் நான் வேறு ஆட்களை வைத்து செய்து கொள்கிறேன் என்றான்.

உடனிருந்தவர்கள் வேறு யாரையோ வைத்து செய்வது நமக்கு இழுக்கு நாம் அவனுடன் சேர்ந்து செய்வோம் அனைத்து ரிஸ்க்கையும் அவன் தானே எடுக்கப் போகிறான் என்று எண்ணி. நாங்களும் உன்னோடு வருகிறோம் என்றார்கள்.

சிறிய, சிறிய வேலைகள் அனைத்துக்கும் அவர்கள் உடனிருந்தார்கள். கடினமானா வேலைகளுக்கு உதவி செய்தார்கள் இருந்து அத்தனை உயரத்தில் வேலை செய்வது சாதாரணம் இல்லை, காற்று பதினைந்து மீட்டர்களுக்கு மேல் வீச சமாளிக்க முடியாது. 

மனதின் கடினமானா திடம் வேண்டும், அப்படி இல்லையென்றால் அது சாத்தியமில்லை அந்த உயரத்தில் வெளியில் நிற்கவே தனி மன உறுதி வேண்டும்.

ஒரு வழியாக வேலை துவங்கியவர்களுக்கு இயற்கை ஒத்துழைக்கவில்லை அதிக காற்று, அதிக மழை இவர்களை எதிர் நோக்கி ஒரு நிறுவனமே காத்து நிற்கிறது.

யார் காத்து நின்றால் என்ன காலம் நேரம் எல்லாம் துணையாக இல்லாமல் எப்படி செயல் செய்து முடிக்க முடியும்?

நாம் நினைத்தால் மாத்திரம் போதாது இயற்கை முடிவு செய்ய வேண்டும். அல்லாமல் நாம் எதை சாதிக்க.

பொறுமை காத்திருந்தவர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் சவால்கள் நிறைந்து இருந்தது. ஆனால் இறைவன் அருளால் அவர்கள் காலம் சாதகம் ஆனது நல்ல முறையில் அதனை செய்து முடித்தனர்.

இந்த வெற்றிக்கு முழு காரணம் ராமு தான் அவனது தன்னம்பிக்கை தான். அவனால் மட்டும் முடியும் என்று அவன் நினைக்கவில்லை ஆனால் செய்து முடிக்கவேண்டும் என்ற உத்வேகம் அவனை செய்ய வைத்தது. அவனுக்கு பக்க பலமாகா நால்வரை அனுப்பி வைத்தது. 

தன்னம்பிக்கை என்பது யாரோ விதைப்பது அல்ல அது தானாக உள்ளிருந்து வருவது.

உங்கள் நேர்மறை எண்ணம் உங்களை அனைத்து செயல்களிலும் வெற்றிப் பெற செய்யும். 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...